சாமானியர்களின் நம்பிக்கை பலம்

சாமானியர்களின் நம்பிக்கை பலம்

புதுடெல்லி:

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாமானியரின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் கர்தாப்பூர் காரிடர் வழித்தடத்தை இன்று பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக்கூடாது.

ராமர் பக்தி அல்லது ரஹீம் பக்தி எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் பக்தியின் உணர்வை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள். இந்த தீர்ப்பு சாமானியர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்