சென்னை:
சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். அவரை சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து கோவளத்தில் இருந்து சீன அதிபர் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சீன அதிபர் ஜின்பிங் உருவம் பதித்த பட்டு சால்வையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் கிளம்பினார். அப்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.