இந்திய மக்களுக்கு எடுத்துக்காட்டாக பிரதமர் திகழ்கிறார்

இந்திய மக்களுக்கு எடுத்துக்காட்டாக பிரதமர் திகழ்கிறார்

சென்னை:
தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வரவேற்பதற்காக மாமல்லபுரம் சென்றிருந்தார் பிரதமர் மோடி.

நேற்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிற்பங்களை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் இரவு உணவு அருந்திவிட்டு சீன அதிபர் சென்னையில் உள்ள சோலா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

பிரதமர் மோடி கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார்.

இன்று காலை உடற்பயிற்சியை முடித்த பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை வெறும் கைகளால் அகற்றினார்.

மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பிரதமர் மோடியின் திட்டம்.

இதனை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றினால் பொது இடம் அனைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்