ராஞ்சி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி 39 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது. ரோஹித் சர்மாவும் ரஹானேவும் சிறப்பாக விளையாடி சரிவிலிருந்து மீட்டனர்.
ஆட்டம் சூடுபிடித்த நிலையில், 58வது ஓவரில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.