மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. நெகிழிக்கு மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக்கு மாற்றான பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.