அல்மாட்டி:
கஜகஸ்தானில் விமான விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து பெக் ஏர் விமானம், நூர் சுல்தான் நகரை நோக்கி புறப்பட்டபோது, சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அங்கிருந்த 2 மாடி கட்டிடத்தில்மோதி கீழே விழுந்தது. இதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் அல்மாட்டி அதிகாரிககள் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய எஞ்சிய பயணிகளை மீட்க விமான நிலைய அவசர சேவைகள் செயல்பட்டு வருகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.