கொல்கத்தா:
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையே பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளநிலையில், நகரம் முழுவதும் ‘பிங்க்’ மயமாக காட்சியளக்கின்றன.
இந்திய அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறுகிது. இந்த போட்டியில் முதன் முறையாக ‘பிங்க்’ பால் பயன்படுத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
இந்நிலையில், முதன் முறையாக ‘பிங்க்’ நிற பந்துகளை போட்டியில் பயன்படுத்துவதால், இதனை கொண்டாடும் விதமாக கொல்கத்தா முழுவதும் ‘பிங்க்’ நிறத்தில் ஜொலிக்கிறது.
இதுகுறித்த புகைப்படங்களை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தல் வெளியிட்டுள்ளார். இந்த போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானமும் ‘பிங்க்’ நிறத்தில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.