சூட்கேசில் துண்டுதுண்டாக உடல்

சூட்கேசில் துண்டுதுண்டாக உடல்

மும்பை:

மும்பை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் துண்டுதுண்டாக வெட்டி சூட்கேசில் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாகிம், மாக்தூம் ஷா பாபா மசூதி அருகே கடற்கரையில் பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்துகொண்டிருந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சூட்கேசை எடுக்க முயன்றபோது, அந்த சூட்கேசில் கால் வெளியே தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்தபோது, துண்டு துண்டாக வெட்டிய ஆண் சடலத்த பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், தலைப்பகுதி இல்லாததால் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்