புதுடெல்லி:
மக்களுக்கு எளிதாக எரிபொருள் கிடைக்கும் வகையில், சூப்பர் மார்க்கெட்டுகளில் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் முன்மொழியவுள்ள இந்த திட்டத்தையொட்டி பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பியூச்சர் குரூப், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ உள்ளிட்ட நிறுவனங்களும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.