புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து, நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.