சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்துசெய்யக்கோரி துணை நடிகர்கள் 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வெளியூரிலிருந்து வரும் உறுப்பினர்கள் சென்னை வந்து வாக்களிக்க அனுமதி மறுத்ததாக பெஞ்சமின் உள்ளிட்ட 3 துணை நடிகர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.