அத்திவரதருக்காக முறையீடு

அத்திவரதருக்காக முறையீடு

சென்னை:

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்க் நீட்டிக்க, பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.

இந்த தரிசனம் வரும் 16ம் தேதியோடு முடியும் நிலையில், அனந்தசரஸ் குளத்திற்கு அத்திவரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம் செய்ய, 16ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்