நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் புகுந்த நபர்

நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் புகுந்த நபர்

புதுடெல்லி:

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை கையில் கத்தியுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென ஒருவர், கையில் ஆயுதத்துடன் வந்ததையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து நாடாளுமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், டெல்லி லக்ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்சா என்றும், தேரா சச்சா சவுதா தலைவர் மற்றும் கற்பழிப்பு குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பின்பற்றுபவர் என தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்