சென்னை:
பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு, இயக்குனர் பேரரசு மற்றும் ரே £போ சங்கர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வறுப்புறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்தார். இதனையடுத்து, ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போர £ட்டங்கள் நடந்தன. இதுசம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு காங்கிரசை சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்தார். மேலும், இயக்குனர் பேரரசு மற்றும் காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பேரரசு தனது டுவிட்டர் பதிவில், பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல், ரோபோ சங்கரும், தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.