சென்னை:
பத்திரப்பதிவு செய்தவுடன் இனி தானாகவே பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முடிந்தவுடன், ஒப்புகைச்சீட்டை வைத்து தாலுகா அலுவலகத்தின் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
இந்த நடைமுறையால் சில தாலுகா அலுவலகங்களில் நீண்ட அலைக்கழிப்புக்கு பின்பே பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. இந்த இழுத்தடிப்பு புகாரையடுத்து, பத்திரப்பதிவு செய்தவுடன் தனாகவே பட்டா மாறுதல் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தாலுகா அலுவலகம் செல்லத் தேவையில்லை. மேலும் சார்பதிவாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.