சென்னை:
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் சுலபமாக பாஸ்போர்ட் பெறும் வகையில் பாஸ்போர்ட் மேளாவை சென்னை போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல்த்துறையில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெறும் வகையில் துவக்கவிழா மற்றும் முன்பதிவு நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். துவக்கவிழாவில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக்பாபு கலந்துகொண்டார்.