3 பயணிகள் ரயில் சேவை துவக்கம்

3 பயணிகள் ரயில் சேவை துவக்கம்

புதுடெல்லி:

தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவையிலிருந்து பழனிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் தற்போது நிரந்தர பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது.
பழனிக்கு இயக்கப்படும் புதிய பயணியர் ரயில், கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்கமாக பழனியிலிருந்து 10.45க்கு புறப்பட்டு மதியம் 2.00 மணியளவில் கோவை வந்தடையும்.

பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில், காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு கோவை வந்தடையும். மறுமார்கமாக கோவையில் 5.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இந்த ரயில் சேவைகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்