பெங்களூரு:
பெங்களூரு நகரில் உள்ள காட்டன்பேட்டை என்ற இடத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் பஸ் மதியம் 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டன் பேட்டையில் வாலிபர் ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் ஏறினார்.
பஸ் கிளம்பியவுடன் கையில் இரும்பு கம்பியால் பயணிகளை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இதனால் பார்த்து பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர். மேலும் தாக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. எனவே வாலிபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.