4 தொகுதிகளில் வெளியூர் கட்சி பணியாளர்கள் வெளியேற உத்தரவு..!

4 தொகுதிகளில் வெளியூர் கட்சி பணியாளர்கள் வெளியேற உத்தரவு..!

சென்னை:

இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளிலிருந்து வெளியூர் கட்சி பணியாளர்கள் நாளை வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூளூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களிலிருந்து வந்த கட்சித் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த தொகுதிகளில் நாளையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இருந்து நாளை மாலை 6 மணிக்கு மேல், வெளியூரிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்