ரிசல்ட் அன்றே கட்சிகளுடன் ஆலோசனை..! இப்போதே அழைப்பு அனுப்பிய சோனியா..!!

ரிசல்ட் அன்றே கட்சிகளுடன் ஆலோசனை..! இப்போதே அழைப்பு அனுப்பிய சோனியா..!!

புதுடெல்லி:

நடந்துவரும் மக்களவை தேர்தலின் முடிவு வெளியாகும் அன்றே அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் சோனியா.

தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டாலும் பிரச்சாரத்தில் அதிகம் ஈடுபடாமல் அமைதி காத்து வருகிறார். பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் சத்தமில்லாமல் பேச்சு நடத்தி வருகிவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் முடிவு வெளியாகும் அன்றே, டில்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு சோனியா அழைப்பு அனுப்பியுள்ளார். இந்த அழைப்பு திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அனுப்பியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும் என சோனியா நம்புவதால், கமல்நாத் போன்ற மூத்த தலைவர்களை அனுப்பி பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் ஜெயகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவ் உள்ளிட்டவர்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்