புதுடெல்லி:
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் உயிருடன் கடத்திய 12 கிளிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டு பயணி அன்வர்ஜோன் ரக்மத்ஜோனோவ், உயிருடன் 12 கிளிகள் வைத்திருந்தார்.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 12 கிளிகளையும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.