சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது.
பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அதனை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எந்த விதமான கூட்டத்திலும், நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.