புதுடெல்லி:
டெல்லியில் வாகனங்களை தீவைத்து எரித்து வரும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பொதுமக்களின் புகாரின் பேரில் போலீசாரின் தேடுதல் வேட்டையில் 2 வாலிபரை இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் இதுவரை 12 வாகனங்களுக்கு தீவைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.