புதுடெல்லி:
பெற்றோரை கைவிடும் பிற்ளைகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது.
பெற்றோர்களை முதுமை காலத்தில் தவிக்க விடுவது அதிகரித்து வருவது குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் அலுவலகம், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூகம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் விதிக்கப்படும் சிறைத்தண்டனை 6 மாதமாக அதிகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.