பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் மறுஆய்வு

பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் மறுஆய்வு

திருவனந்தபுரம்:

பரம்பிகுளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், ஆனைமலையாறு திட்டம், நல்லாறு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கேரள முதல்வரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அளித்த பேட்டியில், பரம்க்பிகுளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும், இந்த குழுவில் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து தலா 5 பேர் இடம்பெறுவார்கள் எனவும், இந்த குழுவினரின் ஆலோசனை கூட்ட தேதி இன்னும் ஒருவாரத்தில் முடிவுசெய்யப்படும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்