சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் நவம்பர் 14ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி தேர்தலையும் கூட்டணி அமைத்தே திமுக எதர்கொள்ளும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பிறகு உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக தலைவர் – மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.