சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 27 மற்றும 28ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவவதும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதனையயடுத்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் விருப்ப மனுக்கள் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை முன்கூட்டியே முடிக்கும்படி பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.