புதுடெல்லி:
உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில், வார்டு வரையறை செய்யும் பணிகள் இருப்பதால் தமிழக அரசு சார்பில், உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை கால அவகாசம் கோரியது.
இதனைத்தொடர்ந்து, உச்நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது.