பான் கார்டு செல்லாது; மார்ச் 31 கடைசி

பான் கார்டு செல்லாது; மார்ச் 31 கடைசி

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை வருமானவரித்துறை கால அவகாசத்தை கொடுத்து வருகிறது. ஆனால் இதுவரை 30.75 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17.58 கோடி பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை.

இந்நிலையில், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாகும். அதற்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் கார்டு செல்லாததாக இருந்தால் வருமானவரி தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்