பழனி:
பழனி முருகன் கோவிலில் 33 நாட்களில் அதன் உண்டியல் காணிக்கை ரூ.2.84 கோடி வசூலாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோவிலில் உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. இதில், கடந்த 33 நாட்களில் ரூ.2.84 கோடி ரொக்கம், 1,117 கிராம் தங்கம், 17 ஆயிரம் கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.