பாக்., தாக்குதல்; இந்திய வீரர் பலி

பாக்., தாக்குதல்; இந்திய வீரர் பலி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீரின், ரஜோரி மாவட்டத்தின் நவ்செரா எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் சந்தீப் தபா உயிரிழந்தார். தொடர்ந்து எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த பதிலடி தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்