இந்திய ராணுவம் பதிலடி; 2 பாக்., வீரர் பலி

இந்திய ராணுவம் பதிலடி; 2 பாக்., வீரர் பலி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டார் மற்றும் பல்லன்வாலா ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுக்கும் வகையில், தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்