கராய்ச்சி:
பாகிஸ்தானின் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 65 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலிருந்து ராவல்பின்டிக்கு சென்றுகொண்டிருந்த தேஸ்கம் விரைவு ரயிலில், பயணிகள் சிலர் சமைப்பதற்காக 2 கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து ரயிலில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் 3 பெண்டிகள் எரிந்து நாசமாயின.
இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Over 60 killed as fire engulfs passenger train in east #Pakistan: Rescue Official pic.twitter.com/NnP2EVBAT0
— Global Times (@globaltimesnews) October 31, 2019