கோவையில் பாகிஸ்தான் பயங்கரவாதி

கோவையில் பாகிஸ்தான் பயங்கரவாதி

கோவை:
கோவையில் தற்போது ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை தமிழக போலீசுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது.

அதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்கு நுழைந்துள்ளனர்.

மேலும் அவர்கள் கோவையில் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கையை சேர்ந்த முஸ்லீம்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையத்துக்கு செல்பவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்