இஸ்லாமாபாத்:
இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் பேசியுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான் விவகாரங்கள் துறை அமைச்சர் அலி அமீன் கண்டப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உடனான பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்படும் என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரியாக கருதப்படும் என்றும், இந்தியா மீதும், அதை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அலி அமீன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களையும் கொத்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.