இஸ்லாமாபாத்:
ஐநா.,வின் நல்லெண்ணத் தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ராவை திரும்பப்பெறுமாறு ஐ.நா.,வுக்கு பாகிஸ்தான் கடிதம் அனுப்பியுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, கடும் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் ஐநாவிடம் முறையிட்டது. அதில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவித்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவதால், ஐநாவுக்கான நல்லெண்ணத் தூதராக உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை திரும்பப்பெற வலியுறுத்தி ஐநா சபைக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியுள்ளது.