ஜனாதிபதிக்கு பாக்., அனுமதி மறுப்பு

  • In General
  • September 7, 2019
  • 194 Views
ஜனாதிபதிக்கு பாக்., அனுமதி மறுப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் வான் வழியாக செல்ல இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது.

வரும் செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை அன்று, அரசு முறை பயணமாக ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்ல உள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வான் வழியாக செல்ல குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்துக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக பாக். அமைச்சர் குரேஷி தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்