பாக்., ராணுவத் தளபதிக்கு ஆயுள் தண்டனை!

பாக்., ராணுவத் தளபதிக்கு ஆயுள் தண்டனை!

பாக்தாத்:

பாகிஸ்தானின் அரசு ரகசியங்களை உளவு பாத்ததாகவும், அதை வெளியிட்ட குற்றத்துக்காகவும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஜாவத் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குறித்த தேசிய ரகசியங்களை உளவு பார்த்ததாகவும், வெளியிட்டதாகவும் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவத் இக்பால், ஓய்வுபெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வான், ராணுவ மருத்துவர் வாசிம் அக்ரம் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், ஜாவத் இக்பாலுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற இருவருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற மூன்று பேரும் எந்த ரகசியத்தை உளவு பார்த்தனர், எதைக் குறித்தத் தகவலை வெளியிட்டனர் குறித்த எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்