இஸ்லாமாபாத்:
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான தூதரை திரும்பப்பெற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடியது. கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்பப்பெற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் புதிய தூதர் வரும் 16ம் தேதி பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.