குஜராத்:
கடல் வழியாக பயிற்சி பெற்ற பாகிஸ்தான் கமாண்டோக்கள் குஜராத்திற்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலோர காவல்படை அனுப்பிய எச்சரிக்கை தகவலை அடுத்து, குஜராத்தின் கடல் எல்லைகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பை பலப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள கட்ச் வளைகுடா வழியாக ஊடுருவி உள்ளதாக கடலோர காவல் படை தகவலையடுத்து, முந்த்ரா, கண்ட்லா துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.