பாக்., தாக்குதல்; இந்தியா பதிலடி

பாக்., தாக்குதல்; இந்தியா பதிலடி

ஜம்மு:

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேவ்கர் மற்றும் குல்பர் செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக தாக்கி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது.

பூஞ்ச் மாவட்டத்தின் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே வசித்து வரும் 5 பேர் தடுப்பு வேலியை தாண்டி சென்றனர். வேலியை தாண்டி சென்ற தங்களது கால்நடைகளை பிடிக்க அவர்கள் சென்றபேது பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய எல்லையில் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்