பாக்., ராணுவத்தளபதி பதவி நீட்டிப்பு

பாக்., ராணுவத்தளபதி பதவி நீட்டிப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவாவின் பதவி காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு தற்போது 58 வயதாகிறது. ராணுவப்பள்ளியில் படித்த இவர், கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தலைமை பொறுப்புக்கு வந்தவர்.

தற்போது காஷ்மீர் பிரச்சனை தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவுடனான உறவுகளை தடை செய்தது. மேலும், எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்தியா வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், பாகிஸ்தான் ராணுவநிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளிப்பதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்