ஜம்மு காஷ்மீர்:
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தின், கிருஷ்ணா காதி மண்டலத்தில் இந்திய ராணுவம் முகாம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.