லாகூர்:
போலி வங்கிக்கணக்கின் மூலம் பண மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் தனது ஜாமினை நீட்டிக்கும்படி சர்தாரி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனுவை இஸ்லாமாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.