நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாக்., வீரர்!

  • In Sports
  • May 20, 2019
  • 178 Views
நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாக்., வீரர்!

இஸ்லாமாபாத்:

உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் இடம்பிடித்திருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணியில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. இதில், அபிட் அலி, ஜுனைத்கான், பஹிம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸஅ, ஆசிப்அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் அணியிலிருந்து தன்னை நீக்கியதற்கு நூதன முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் ஜுனைத்கான்.

தன்னுடைய ரசிகளுக்காக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மை கசப்பானது’’ என்று பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்