ஜெய்ப்பூர்:
பாகிஸ்தான் வான் எல்லையிலிருந்து அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சரக்கு விமானம் இந்திய விமானப்படையால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய போர் விமானத்தால் மடக்கி பிடிக்கப்பட்ட பாகிஸ்தானின் ‘ஆன்டோவோவ் ஏஎன்12’ என்ற கனரக சரக்கு விமானத்தை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யபட உள்ளதாக அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுளள்ளது.
சரக்கு விமானத்தின் விமானியிடம் இந்திய விமானப்படை அதிகாரிகள் தீவிமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.