சென்னையில் பெயிண்டர் கொலை

  • In Chennai
  • September 23, 2019
  • 243 Views
சென்னையில் பெயிண்டர் கொலை

சென்னை:

சென்னையில் பெயிண்டர் ஒருவரை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை லாதர் தெருவை சேர்ந்தவர் பெயிண்டர் தமிழரசன். இவர் நேற்றிரவு வீட்டிற்குள் இருந்த அவரை, பட்டாக்கத்தியுடன் வீட்டில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், தமிழரசனை வெட்டியது.

வீட்டினுள் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வரவே அந்த கும்பல் தப்பியோடியது. இதனையடுத்து, தமிழரசனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அரவிந்த் உள்ளிட்ட 4 பேர் கும்பல் தமிழரசனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் சசி என்பவர் கொலை வழக்கில், தமிழரசன் சிறைத்தண்டனை பெற்றவர். இதனால் பழிக்குப்பழி கொலை நடத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்