ஜாமீன் வந்தாலும் மீண்டும் கைது

ஜாமீன் வந்தாலும் மீண்டும் கைது

டெல்லி:
டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கினாலும் அவர் மறுபடியும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு அதிரடியாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரை பிற்பகல் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்துவார்கள்.

மேலும், சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் இன்று ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று தெரிகிறது.

அதே சமயம் சிதம்பரம் தரப்பு ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் முறையிடுகிறது. அப்படி கிடைத்து வெளியே வந்தாலும் மீண்டும் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. மறுபடியும் முன் ஜாமீன் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்