சென்னை:
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.