சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், ஏழு பேரின் விடுதலைக்கு அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.